A UBAIDULLAH: சிந்தனை துளி
Showing posts with label சிந்தனை துளி. Show all posts
Showing posts with label சிந்தனை துளி. Show all posts

Monday, April 28, 2025

If you praise someone who deserves to be praised, you too will be praised
April 28, 20250 Comments


👉 info mau world 


  If you praise someone who deserves to be praised, you too will be praised

One thing that everyone always likes to do is to be admired by others.

But those who refuse to praise him while he is alive, praise him after his death...

That's why many people's beauty goes unnoticed while alive...

One's noble deeds should be appreciated during one's lifetime...

There may even be achievers near us. He should be recognized and appreciated.

Never hesitate to appreciate...!

We all crave appreciation. There are no exceptions to this.

We mistakenly believe that praising others will diminish our worth.

Or we mistakenly think that appreciation will increase the head weight...

A person who has done good to the society should be praised immediately in front of many people.

That too should be appreciated without delay...

Yesterday's food does not satisfy today's hunger. The hunger for appreciation is never quenched...!

Appreciate the good deeds of others often. Then many people will love you...!

Appreciate the achiever in front of others. Let his dignity rise in the presence of others.

It will be remembered for a long time.

Appreciation also builds relationships...!!

If you praise deserving people, you will also get fame.

↬ By A Ubaidullah

Reading Time:
By walking calmly Your livelihood Does not decrease...
April 28, 20250 Comments

By walking calmly Your livelihood Does not decrease...


hard work

your livelihood

Not adding up...


Pleasure does not last

Suffering doesn't last...


Prosperity does not last for you,

Misery doesn't last...


Mind enough

If you are the one who has...


You and the king who rules the world are equal...

                                                                                                                                     A Ubaidullah》

Reading Time:

Sunday, October 17, 2021

MOTIVATIONAL THOUGHTS ⚘⚘ Hope⚘⚘⚘
October 17, 20210 Comments

⚘⚘ Hope⚘⚘⚘



The whole world

That can't be

while saying

Maybe

It can be done

A listening voice

Hope..!


Your successes

The rule

If the door closes

Faith is

Key to that door

will open..

Have faith..!


There won't be much time

Good luck..

It won't be long

Recommendation..

Not always

Help..


Always wins

Hope..!

Feel free to try..

While trying

Thorns will also kiss you..!

Try with confidence..!

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Reading Time:

Saturday, October 16, 2021

 மனிதனைப் பார்த்து தான் மனிதன் மாறுகின்றான் !!!
October 16, 20210 Comments


சென்னை ஏர்போட்டை விட்டு லக்கேஜுடன் வெளியே வந்து பெருங்களத்தூருக்கு ஆட்டோ பேசினேன்.


காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் பஸ் எல்லாம் பைபாஸ் வழியே கிண்டி வராமல் நேராக பெருங்களத்தூர் செல்கிறது. நான் சிதம்பரம் போக வேண்டும்.


"ஆட்டோ பெருங்களத்தூர் எவ்ளோப்பா?" 


"500 ரூபாய் சார்"


"400 ரூபாய்க்கு வருவியா?"


"சார் 450 ரூபாய் ஏறுங்க சார்!"


சென்னைக்கே உரிய ஸ்டைலில் ஆட்டோ பறந்தது. தாம்பரம் தாண்டியது.


"ஏம்பா தம்பி நீ இந்த வழியா சவாரி போனா எங்க காலை டிபன் சாப்பிடுவ?"


"ரோட்டுக்கடைத்தான் சார்!"


"அப்ப நீ சாப்பிடும் கடை எதுவோ அங்க நிறுத்து டிபன் சாப்பிட்டு போவோம்!" 


இரண்டு கிலோ மீட்டர் தாண்டி ஒரு புளிய மர ஓரமா இருந்த தள்ளு வண்டி கிட்ட ஆட்டோ நின்றது.


ஒரு நடுத்தர வயது அம்மா நெற்றி நிறைய திருநீறு பொட்டு இல்லை கழுத்தில் தாலி இல்லை விதவை என சொல்லியது தோற்றம்.


"வாங்க சார்!" என்றது.


"இங்க தான் சார் வயித்துக்கு ஒன்னும் பண்ணாது!" என்றான்.


இட்லி, வடை, பொங்கல், பூரி, மசாலா டீ என கட்டினோம்.


"எவ்ளோம்மா? என்றேன்.


"150 ரூபாய் சார்!" என்றதம்மா. 200 ரூபாய் கொடுத்தேன்.


மீதியை சில்லரையாக பொறுக்கியது அந்தம்மா. 


"ஞாயிற்றுகிழமை ஆபீஸ், கடை, ஃபோக்டரி எல்லாம் லீவுனால வியாபாரம் இன்னிக்கு டல் சார்!" என்றது.


"சரிம்மா 50 ரூபாய நீயே வச்சிக்க, நாளைக்கு இந்த பக்கமா வருவேன் வாங்கிக்கிறேன்!" என்றுகூறி புறப்பட்டோம்.


ஆட்டோக்காரர், "சார் நீங்க சிதம்பரம் போறீங்க. நாளைக்கு வருவேன்னு 50 ரூபாய அந்த அம்மாகிட்ட ஏன் விட்டுட்டு வர்றீங்க?"


"தம்பி இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹேட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 500 ரூபாய் அப்புறம் டிப்ஸ், டாக்ஸ் என 600 ரூபாய் கொடுத்திருப்போம் இல்லையா? எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவனும் தம்பி!


சங்கம் அமைப்பது, வசூல் செய்வது, அதன் மூலம் பொது சேவை செய்வது, புண்ணிய தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது, உண்டியல் போடுவது என இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை தம்பி, நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்பா!" என்றேன்.


ஹைவேயில் ஓரம் மலை, மரங்கள், தெடர்ந்து வரும் ரயில்வே லைன். பயணிகள் பஸ், லாரி, கார், அத்துடன் இளங்காலை காற்று இதமான சவாரி கடந்து பெருங்களத்தூர் வந்தது. இந்தாப்பா நீ கேட்ட 450 ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.


"400 ரூபாய் போதும் சார்!" 


"ஏம்பா?"


"அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும் புண்ணியம் கிட்டட்டும் சார்!"


நான் போடும் புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் கணக்கு.


தொடரட்டும் நமது புண்ணிய கணக்குகள் …


சிறுகதை

Reading Time:

Wednesday, October 13, 2021

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களே...!!!!!
October 13, 20210 Comments

 இஸ்லாமிய நெஞ்சங்களே...!!!!! விழித்துக்கொள்ளுங்கள் 


வீண்  விடையங்களை  தவிர்த்துக்கொள்ளுங்கள் 


விடிய விடிய தொலைபேசியில் தேவையற்ற வீண் தொடர்புகள் 

பஜ்ர் அதானை கடந்தும் 

உறங்கும் சோர்வான விழிகள் 


தொழுகையை மறந்து 

பப்ஜி விளையாடும் கைகள்

அல்குர்ஆன் வரிகளையே மறந்த

கறுமை உள்ளங்கள் 


ஒருமுறையாவது சலவாத்து உச்சரிக்கத  நாக்கு

டேட்டா போடுவதற்காக

மட்டுமே அசையும் கால்கள் 


யாரென்றே தெரியாத

பெண்களிடம் மணிக்கணக்கில் கதை பேசி நட்பு எனும் போர்வைலே

விபச்சாரத்தின் சுவடுகள் 


நல்லவனாய்  நயனம் செய்து 

முகத்திரை போட்டுக் கொண்டு தனது வல்லமையால்  ஹராமின்  வழியில் தடுமாறும் இஸ்லாமிய நெஞ்சங்களே...!!!!! 


விழித்துக் கொள்ளுங்கள் 

நிச்சயம் ஒரு நாள்

உற்சாகமான உங்கள் உடல்கள் உறங்கப் போகும்  காலம் வரும் 


மரணம் நெருங்கும் முன்னே மன்னரைக்காய்  சேமிய்யுங்கள்   மனிதப் புனிதர்களாக 

மண் மீது மிளிர்ந்ததிடுங்கள் 


மரணப்படுக்கையில்  கழித்து வந்த வாலிபத்தை   நினைத்து 

மனம் நொந்து போகும்

வண்ணம் வாழ்ந்து விடாதீர்கள் 


சுவனத்து பூஞ்சோலையில் 

சுதாகர் பலருடன்

சுகமாக வாழும் வாழ்வின் 

இலக்காக கொள்ளுங்கள் 

Reading Time:
 👉 *உன் வாழ்க்கையை நீ வாழ்*❗
October 13, 20210 Comments

Info Mau World



*எறும்பு* - பட்டாம்பூச்சியின்

வாழ்க்கையை வாழ

*ஆசைப்படவில்லை.*


*நாய்* - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட *பொறாமைப் படவில்லை.*


*யானை* - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு *ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.*


*காகம்* - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட *ஏங்கவில்லை.*


🔴 *அதனதன் வாழ்க்கையை  அது வாழ்கின்றது!!!*


*நீ மட்டும் ஏன்* பொறாமைப் படுகிறாய்.....???


*நீ ஏன்* அடுத்தவரைப் பார்க்கிறாய்.....???


*நீ மட்டும் ஏன்* புலம்புகிறாய்......???


*நீ ஏன்* வருந்துகிறாய்......???


*நீ ஏன்* ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய்.......???


*உன் வாழ்க்கை விசேஷமானது......!!!*


நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க *முடியாது.....!!!*


நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட *முடியாது......!!!*


நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ *முடியாது....!!!*


ஆகாயம் போல் பூமி *இல்லை.....!!!*


பூமி போல் காற்று *இல்லை .....!!!*


காற்று போல் தீ *இல்லை...!!!*


தீயைப் போல் தண்ணீர் *இல்லை.......!!!*


ஆலமரம் போல் பப்பாளி மரம் *இல்லை.....!!!*


பல்லி போல் புலி *இல்லை......!!!*


தங்கம் போல் தகரம் *இல்லை......!!!*


பலாப் பழம் போல் வாழைப் பழம் *இல்லை......!!!*


கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் *இல்லை......!!!*


துணி போல் கருங்கல் *இல்லை.....!!!*


சிற்பம் போல் சாதாரண கருங்கல் *இல்லை.....!!!*


நாற்காலி போல் கட்டில் *இல்லை.....!!!*


ஒரு மரத்தின் பழங்களிலேயே

ஒன்று போல் மற்றொன்று *இல்லை.....!!!*


ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே

ஒருவர் போல் மற்றொருவர் *இல்லை......!!!*


ஆண் உடல் போல் பெண்ணுடல் *இல்லை.....!!!*


நேற்று போல் இன்று *இல்லை.....!!!*


இன்று போல் நாளை *இல்லை......!!!*


போன நிமிடம் போல் இந்த நிமிடம் *இல்லை.....!!!*


இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் *இல்லை.....!!!*


ஒன்றுபோல் மற்றொன்று *இல்லை.......!!!*


*இத்தனை ஏன் ....*❓


உன் தலைவலி போல் பல்வலி *இல்லை......!!!*


உன்னுடைய கண் போல் காது *இல்லை.....!!!*


*இனியாவது சரியாக சிந்தனை செய்.....!!!*


அதனால் நீ *தனி* தான்.....!!!


உன் கைரேகை *தனி* தான்......!!!


உன் பசி *தனி* தான்......!!!


உன் தேவை *தனி* தான்.....!!!


உன் பலம் *தனி* தான்.....!!!


உன் பலவீனம் *தனி* தான்......!!!


உன் பிரச்சனை *தனி* தான்......!!!


உனக்குரிய தீர்வும் *தனி* தான்.....!!!


உன் சிந்தனை *தனி* தான்.....!!!


உன் மனது *தனி* தான்.....!!!


உன் எதிர்பார்ப்பு *தனி* தான்......!!!


உன் அனுபவம் *தனி* தான்.....!!!


உன் பயம் *தனி* தான்.....!!!


உன் நம்பிக்கை *தனி* தான்.....!!!


உன் தூக்கம் *தனி* தான்......!!!


உன் மூச்சுக்காற்று *தனி* தான்......!!!


உன் ப்ராரப்தம் *தனி* தான்.....!!!


உன் வலி *தனி* தான்.....!!!


உன் தேடல் *தனி* தான்.....!!!


உன் கேள்வி *தனி* தான்.....!!!


உன் பதில் *தனி* தான்.....!!!


உன் வாழ்க்கைப் பாடம் *தனி* தான்......!!!


உன் வாழ்க்கை *தனி* தான்......!!!


              👌 👇 👌 


உன் வாழ்க்கை *அதிசயமானது தான்......!!!*


உன் வாழ்க்கை *ஆச்சரியமானது தான்......!!!*


உன் வாழ்க்கை *அபூர்வமானது தான்......!!!*


உன் வாழ்க்கை *அர்த்தமுள்ளது தான்.....!!!*


உன் வாழ்க்கை *உத்தமமானது தான்.....!!!*

              👌 👍 👌 


*அதனால்.....*


*இன்றிலிருந்து......*


*இப்பொழுதிலிருந்து.....*


*உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!*


*வாழ்வின் ரசனை தெரியும்.......!!!*


*வாழ்வின் அர்த்தமும் புரியும்........!!!*


*இனியும் உன் வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதே......!!!*


*உன் வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே.....!!!*


*உன் வாழ்க்கையை உதாசீனப் படுத்தாதே.....!!!*


*உன் வாழ்க்கையை வெறுக்காதே.......!!!*

Reading Time:

Saturday, October 9, 2021

💗💗💗படித்தில் பிடித்து💗💗💗
October 09, 20210 Comments

 



ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.ஒவ்வொரு நாளும் கடையை மூடப்போகும் சமயம், ஒரு தலைக்கனம் பிடித்தவன் அக்கடைக்கு வந்து, கடைக்காரரிடம், "முதலாளி, மூளையிருக்கா...?" என்று கேட்பான்.


அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், “என்ன முதலாளி, இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?” என்று கிண்டலுடன் கேட்டு

விட்டுச் செல்வான்.


இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது தானும் மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்று அந்தக் கடைக்காரரும் நினைத்துக் கொண்டிருந்தார்.

.

நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் அக்கடைக்காரருடன் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.


அவரிடம் அந்தக் கடைக்காரர் தினமும் ஒருவன் தன்னைக் கேலி பேசி வருவதைச் சொன்னார்.


இதைக் கேட்ட கடைக்காரரின் நண்பர், "அட இவ்வளவு தானே, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.


கடையை மூடப்போகும் சமயம், அந்தத் தலைக்கனம் பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா...?" என்று வழக்கம் போலக் கேட்டான்.


அதற்குக் கடைக்காரரின் நண்பர் அவனைப் பார்த்து,"இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை" என்றான்.


தலைக்கனம் பிடித்தவனுக்கு உச்சந்தலையில் யாரோ குட்டியது போலிருந்தது.


நண்பனின் சாதுர்யமான பதிலைக் கேட்ட கடைக்காரர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது


நாம் ஒருவரை மட்டம் தட்டி பேசினால் நம்மை மட்டம் தட்ட வேறொருவர் இருப்பார்.எனவே யாரையும் கேலியாக பேசுவது கூடாது...


படித்ததில் பிடித்தது.

Reading Time:

Friday, October 8, 2021

siru kadhay
October 08, 20210 Comments


 இஞ்சிப் பிளேன்ட்டி





"மகள்.......மகள்......

எனக்கு இஞ்சி போட்டு ஒரு பிளேன்ட்டி ஊத்தித் தாறீங்களா?"என தனது மருமகள் பஸ்னாவிடம் கேட்டார் பாரூக் நானா.தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த பஸ்னா கோபத்துடன் எழும்பினாள்.

"இந்த கிழட்டுக்கு வேற வேல இல்ல.ஒரே இஞ்சிப் பிளேன்ட்டி.மனிசன்ட உசிர வாங்குற.எங்காவது போய்த் தொலையுதுமில்ல" என வாய்க்குள் முணுமுணுத்தவாறு பஸ்னா குசினிக்குள் சென்றாள். 


பாரூக் நானாவுக்கு ஒரே மகன் அர்ஷாத்.பாரூக் நானாவின் மனைவி மௌத்தாகும் போது அர்ஷாதுக்கு வெறும் பதினைந்து வயது தான்.அன்றிலிருந்து அர்ஷாதுக்கு எல்லாம் பாரூக் நானா தான்.அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து, திருமணமும் செய்து கொடுத்து,அவன் இப்பொழுது கட்டார் நாட்டில் ஒரு கம்பனியில் எகௌண்டனாக வேலை பார்க்கிறான்.அவனுக்கு ஒரு மகன். நான்கு வயது ஹஷ்மத்.வெளிநாட்டுக்குச் சென்ற புதிதில் அர்ஷாத் வாப்பாவுக்கு செலவுக்கு பணம் அனுப்புவான்.வீடியோ கோல் பண்ணி பேசுவான்.

இப்போதெல்லாம் அவருடன் அவன் பேசுவதேயில்லை. கோல் வரும் போதெல்லாம் பாரூக் நானா காதைத் தீட்டிக் கொண்டிருப்பார்.எங்கே மகன் தன்னோடு பேச வேண்டும் என்று சொல்ல மாட்டானா? என்று ஏங்குவார்.ஆனால்,

பஸ்னா அவருடன் மகனைப் பேச விட மாட்டாள்.அவள் பேசி விட்டு வைத்து விடுவாள்.

இப்போதெல்லாம் அர்ஷாத் அனுப்பும் பணத்தைக் கூட பாரூக் நானாவுக்கு பஸ்னா கொடுப்பதில்லை.

               

பாரூக் நானா எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டேயிருப்பார்.

வீட்டுப் பின்புறத்தில் வெண்டி ,தக்காளி, மிளகாய் என்று காய்த்துக் குழுங்கும்.முன் புறத்தில் ரோஜா, மல்லிகை என்று பூத்துக் குழுங்கும்.எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டேயிருப்பார்.

பேரனை நேசரிக்கு அழைத்துச் செல்வது கூட்டிக் கொண்டு வருவது,கடைக்குச் செல்வது, பில் கட்டுவது என எல்லா வேலைகளையும் ஓடி ஓடிச் செய்வார். 

பிளேன்ட்டியை குடித்து முடித்த பாரூக் நானா "மகள் பஸ்னா நான் ஆலமரத்தடிக்குப் போய்ட்டு வாரன்"என்று கூறியவாறு வெளியேறினார். "இந்த கிழவன்களுக்கு வேற வேல இல்ல "பஸ்னா முணுமுணுத்துக் கொண்டாள்.சூரியன் கிழக்கில் உதிக்கத் தவறினாலும் ஆலமரத்தடிக்கு போவது மட்டும் நடக்காமல் இருக்காது.பாரூக் நானாவுடன் ஒன்றாகப் படித்தவர்கள் ஐந்து பேர்.ஒவ்வொரு நாளும் நான்கு மணிக்கு ஆலமரத்தடியில் கூடி விடுவார்கள்.ஐந்து மணி வரை உலக நடப்புகளை அலசி ஆராய்வார்கள்.

ஒருவருக்கு ஒருவர் ஆறுதலும் தேறுதலும் கூறிக் கொள்வார்கள். 

              

அன்று மாலை பாரூக் நானா தனது பேரனுடன் சேர்ந்து தோட்டத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்."டடப்பா இங்க பாருங்க சிவப்பு ரோஜா" ஹஷ்மத்துக்கு பூவைக் கண்டு ஒரே குஷி.எந்நேரமும் டடப்பா என்றவாறு அவரையே சுற்றிச் சுற்றி வருவான்.பாரூக் நானா நல்ல வரலாற்றுக் கதைகளை சுவைபடக் கூறுவார். நல்ல பழக்கங்கள் சொல்லிக் கொடுப்பார். அவனுடன் விளையாடுவார்.

ஹஷ்மத்துக்கு டடப்பா என்றால் உயிர்.

           

" டடப்பா உங்க பிரண்ட் வந்திருக்கார்" ஹஷ்மத்தின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் பாரூக் நானா. அவரது நண்பர் அப்துல்லா வந்திருந்தார்."ஆ.... அப்துல்லா வா... வா...." உள்ளே அழைத்து அமர வைத்தார். "என்ன இன்டைக்கு ஆலமரத்தடிக்கும் வரல்ல என்ன பிரச்சினை" ஆவலாகக் கேட்டார் பாரூக்." என்ன செய்ய பாரூக் உன் மருமக மாதிரியா என் மருமக .உனக்குத் தெரியும் தானே! தினம் தினம் ஏதாவது பிரச்சினை. நான் என்ன செய்தாலும் அவளுக்குக் குத்தம் தான்.இன்டைக்கு கைல காசிருக்கல்ல.எனக்கு பேப்பர் பார்க்காம இருக்க முடியாதே ! அது தான் கடைக்கு போன நேரம் சாமான் வாங்கிட்டு மிஞ்சின காசில பேப்பர் வாங்கிட்டன்.இனி வீட்டில ஒரே சண்ட.வீடு முழுக்க ஒரே குப்பயாம் என்று சொல்லி பேப்பர் எல்லாத்துக்கும் நெருப்பு வச்சிட்டா" கவலையுடன் கூறிக் கொண்டு போனார் அப்துல்லா. 

             

"இந்தாங்க அங்கிள் பிளேன்ட்டி " என பஸ்னா தேநீரை நீட்டினாள்."மகள் பஸ்னா எனக்கு மிச்ச நாளாக உங்க இஞ்சி பிளேன்ட்டிய குடிச்சிப் பார்கனும்னு ஆச. பாரூக் எப்பவும் உன்ன பத்தி தானே பேசுவான்.

நீ போடுற இஞ்சி பிளேன்ட்டி,சமையல் எல்லாத்தையும் பாராட்டித் தள்ளுவான்.வாயத் தொறந்தாப் போதும் எப்பவுமே மருமகள் புராணம் தான். என்ன செய்ய மகள் உங்களப் போல ஒரு நல்ல மருமகள் எனக்கு கிடைக்கல்ல.பாரூக் அதிஷ்டசாலி தான். என் வாழ்க்கை இப்படியே நாய் படாத பாடாய்ப் போயிடிச்சி" என பெருமூச்சு விட்டவாறு அப்துல்லா தேநீரைக் குடித்து முடித்தார். பாரூக் நானா மெல்ல சிரித்துக் கொண்டார்.

             

சிறிது நேரத்திற்குப் பிறகு அப்துல்லா போய் விட்டார். பாரூக் நானா மஃரிப் தொழுது விட்டுக் குர்ஆன் ஓதினார்.பேரனுக்கும் ஓதிக் கொடுத்தார்.பேரனை மடியில் வைத்துக் கொண்டு வரலாற்றுக் கதைகள் சொன்னார். ஹஷ்மத் ஆவலோடு கதை கேட்டான். "அதுக்குப் பிறகு என்ன நடந்திச்சி டடப்பா" அவனுக்கு ஆயிரம் கேள்விகள். பொறுமையாக அவற்றுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தார் பாரூக் நானா. அவருக்கு மீண்டும் ஒரு பிளேன்ட்டி குடிக்க வேண்டும் போல் இருந்தது. 

"மகள்.....மகள்.....

பஸ்னா " தொலைபேசியில் மூழ்கியிருந்த பஸ்னாவுக்கு எரிச்சலாக இருந்தது. "சீ.....கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடமாட்டாரே இந்த மனிசன்" என எண்ணியவாறு முன்னறைக்கு வந்தாள்."என்ன....என்ன வேணும்" முகத்தில் பாய்ந்தாள் பஸ்னா. "இல்ல மகள் ஒரு இஞ்சிப் பிளேன்ட்டி......."

இழுத்தார் பாரூக் நானா. 

          

"டடப்பா நீங்க சொல்லியிருக்கீங்க தானே மூத்த ஆக்களோட மரியாதையாப் பேசணும் ,இரக்கமாப் பேசணும் அப்படி என்று ஆனா உம்மா ஏன் எப்பவும் உங்க முகத்தில பாயுராங்க " ஹஷ்மத்தின் கேள்வியைக் கேட்டு துணுக்குற்றாள் பஸ்னா. 

"மகன் டடப்பா ஒரு நாளைக்கு எத்தன முற பிளேன்ட்டி குடிக்கிறன் சொல்லுங்க பார்ப்பம்"


"ஓ ... டடப்பா நீங்க ஒரே இஞ்சி பிளேன்ட்டி தானே கேக்குற"


"உம்மா டடப்பாவோட இருக்கிற இரக்கத்தில தான் அப்படிப் பேசுறாங்க.நான் நிறைய பிளேன்ட்டி குடிக்கிறன் தானே.நான் கேட்ட உடனே எனக்கு ஏசாம ஊத்தித் தந்தா என்டா நான் இன்னும் நெறய குடிப்பேன்.அது  டடப்பாட ஹெல்த்துக்கு சரியில்ல தானே.பிறகு எனக்கு 'சுகர்' நோய் வரும்.அதுதான் என் மேல உள்ள அக்கறல இரக்கத்தில தான் உம்மா அப்படிப் பேசுறாங்க "


"ஓ.... அப்படியா? டடப்பாவோட உம்மாவும் இரக்கமா?ஹஷ்மத் பாரூக் நானாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

வழமையாக பிளேன்ட்டி தயாரித்த பிறகு மேசையில் வைத்து விடும் பஸ்னா இன்று பிளேன்ட்டியை எடுத்துக் கொண்டு பாரூக் நானாவின் அருகில் சென்றாள்.

"மாமா....இந்தாங்க மாமா பிளேன்ட்டி" என

புன்னகைத்தவாறு இஞ்சிப் பிளேன்ட்டியை தனது மாமாவின் கையில் கொடுத்தாள் பஸ்னா.

Reading Time:

Monday, October 4, 2021

அறிவுக்கு விருந்து
October 04, 20210 Comments

 🍃 பிரதிபலன் பாராது உதவுவோம்🍃



🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀

➖➖➖➖➖➖➖➖➖➖

பிரதியீடு சிலநேரங்களில்  எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே இருக்கும்

➖➖➖➖➖➖➖➖➖➖


படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.


பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை  கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.


வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.


அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிபு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.


பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.


அதற்கு உரிமையாளர் . இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் .


" இல்லை சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.


" நண்பரே... உங்களுக்கு விசயம் புரியவில்லை. நடந்த விசயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.


" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன். 


பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.


படகில் ஓட்டை இருந்த விசயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு  இருக்கவுமில்லை.


நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விசயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன். 


கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.


உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது  சிறியதொரு வேலையா?  நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்?  உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.


நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது. ​யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. *நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம்.* 

 பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான். 

Reading Time:
மனதை தொட்ட சில வரிகள்..........!!!!!
October 04, 20210 Comments


 


கதையும் 

படிப்பினையும்..........!!!!!


கணவன் : 

அஸர் தொழுதீர்களா...?


மனைவி :

........இல்லை....


கணவன் : 

அஸர் தொழுதீர்களா...?


மனைவி : 

.......இல்லை......


கணவன் : ஏன்?


மனைவி : 

வேலைகள் முடியும் போது 

மிகவும் களைப்பாக இருந்தது,

எனவே சிறிது தூங்கினேன்....!


கணவன் : 

.......ம்ம்ம் நல்லது.....

இஷாவுக்கு அதான் சொல்ல 

முதல் தற்போது போய் அஸரை.... தொழுதுவிட்டு மஃரிபையும், தொழுங்கள்....!


அடுத்த நாள்....................!!!!


கணவர்.... 

அவரது வேலை நிமித்தம் 

ஒரு பயணத்தை மேற்கொண்டார்....


ஆனால் ...அன்று அவர் வழமைக்கு மாற்றமாக"தான் எந்த பிரச்சினையும் இன்றி பாதுகாப்பாக சென்றடைந்தேன்" 


என்பதை... தொலைபேசியினுடாகதொடர்பு கொண்டோ அல்லது ஒரு குறுந்தகவலினூடிகவோ (sms) மனைவிக்கு அறிவிக்கவில்லை...!


மனைவி l....

தன் கணவன் பாதுகாப்பாக சென்றடைந்தாரா...?


என்பதை... 

அறிந்து கொள்ள தொலைபேசியினூடாக

அவரை தொடர்பு கொண்டாள்....!


ஆனால்...

அவர் பதிலளிக்கவில்லை......


மீண்டும் மீண்டும் 

அழைப்பை ஏற்படுத்தினால்.....


தொலைபேசி மணி ஒழிக்கிறது.........

ஆனால் 

மறுமுனையிலிருந்து பதில் எதுவுமில்லை.....


அவளது மனம் தடுமாறத்தொடங்கியது........


இது வழமைக்கு 

முற்றிலும் மாற்றமானது........


அவள் மீண்டும் மீண்டும் 

அழைப்பை ஏற்படுத்தினாள்.......


ஆனால் 

மறுமுனையிலிருந்து பதில் எதுவுமில்லை.......


பல நிமிடங்கள் கழித்து 

இறுதியாக அவன் அவளைத்...

தொடர்பு கொண்டான்.....


அவள் அவ்வழைப்புக்கு 

பதற்றத்துடன் பதிலளித்தாள்.......


மனைவி : நீங்கள்... 

பாதுகாப்பாக சென்றடைந்தீர்களா...?


கணவன் : ஆமாம்...... அல்ஹம்துலில்லாஹ்........


மனைவி : எப்போது?

கணவன் : கிட்ட தட்ட நான்கு மாணித்தியாலயங்களுக்கு முன்பு...


மனைவி : (கோபத்துடன்)நான்கு மாணித்தியாலயங்களுக்கு முன்னரா?.......


ஏன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை...?.......


கணவன் : வந்து சேரும் போது 

மிகவும் களைப்பாக இருந்தது...

எனவே சிறிது தூங்கினேன்.....


மனைவி : என்னுடன் 

சிறிது கதைத்திருந்தால்

உங்களுக்கு என்னவாகப் போகிறது?...


நான் உங்களுடன் தொடர்பு கொண்ட போதாவது தொலைபேசியினுடைய

மணி ஓசையைக்கேட்கவில்லையா..?.


கணவன் : கேட்டேன்....


மனைவி : பின்னர் ஏன் பதிலளிக்கவில்லை...?....


நீங்கள் என் விடயத்தில் பொடுபோக்காய் இருந்துள்ளீர்கள்...


கணவன் : ஆமாம்......


ஆனால் 

நேற்று நீயும் இவ்வாறு தானே... 


#அதானுடைய ஓசையைக்கேட்டும் பொடுபோக்காய் இருந்தாய்?...... 


#அதான்....... 

அது அல்லாஹ்வினுடைய அழைப்பு.....


அவள் பதிலளிக்கவில்லை..... அமைதிகாத்தாள்..........


மனைவி : (சிறிது மௌனத்திற்குப் பின் கண்ணீருடன்.....)


ஆம்.... 

நீங்கள் உண்மையைத் தான் கூறுகிறீர்கள்.....

அதை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.....


கணவன் : அதற்கு என்னால் 

ஒன்றும் செய்ய முடியாது.....


அதற்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.....


ஆனால்..........

மறுபடியும் இவ்வாறு செய்யாதீர்கள்....


"நான் விரும்புவது....

அல்லாஹ்விடம் கேட்பதெல்லாம்....... 


அல்லாஹ் என்னையும் உங்களையும் சுவனத்தின் ஒரு மாளிகையில் ஒன்று சேர்க்க வேண்டும்......


அங்கு நிரந்தரமான ஒரு வாழ்வை நாம் ஆரம்பிக்க வேண்டும்... 


என்பதே......


"அன்றிலிருந்து அவள் 

கடமையான எந்த அமலையும்.... பிற்போடுவதில்லை....!


"உங்களை உண்மையாக 

நேசிக்கக் கூடிய ஒருவர் எப்போதும்...

அல்லாஹ்வினுடைய பாதையில், நீங்கள் முன் நோக்கிச் செல்ல... உங்களை தூண்டிக் கொண்டே, இருப்பதுடன்.....!!!


உங்கள் பாதையில் நின்று நீங்கள் பின் நோக்கி வராது உங்களை தடுத்துக் கொண்டே இருப்பார்.......!!


==================================

மனதைத் தொட்ட வரிகள்....!!!!!!!!!!!

Reading Time:

Sunday, October 3, 2021

😔😔😔சிருக்கதை😔😔😔
October 03, 20210 Comments

MAU WORLD


 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

மனைவி இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்ட தந்தை மகனிடம் கேட்டார்...

இப்போ இருக்கிற புதிய அம்மாவை உனக்கு பிடித்திருக்கிறதா...


அப்போது மகன் சொன்னான்.

என் அம்மா என்னிடம் பொய் சொல்வார்...

ஆனாலும் இப்போ புதிதாக வந்திருக்கிற அம்மா என்னிடம் பொய் சொல்லவில்லை என்றான்.


இதைக் கேட்ட தந்தை உன் அம்மா சொன்ன பொய் என்ன? என்று கேட்டார்.


அதற்கு அவன் நான் ஏதாவது சேட்டைப் பண்ணினால் உனக்கு இன்று சாப்பாடு கிடையாது என்று சொல்லிவிட்டு எனக்குப் பசி எடுத்தவுடன் என்னைத் தூக்கி மடியில் உட்கார வைத்து பாசத்துடன் ஒவ்வொரு உருண்டையாக ஊட்டி விடுவார்.


ஆனால் தற்போது உள்ள அம்மா நான் சேட்டை பண்ணின போது என்னை அடித்து உனக்கு சோறு கிடையாது என்று சொன்ன வார்த்தையை இரண்டு நாட்களாக காப்பாற்றிக் கொண்டுள்ளார் என்றான்.


அவன் சொன்ன வார்த்தையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட அப்பா அவனை உடனடியாக தூக்கி ஓட்டலுக்கு கொண்டுபோய் உணவு வாங்கி கொடுக்கிறார் கண்ணீருடன்.


"அம்மா மட்டுமே அம்மாவுக்கு சமம்"

பூமியில் கண்களால் காணும் வரம் அம்மா.


 🛑 *படித்ததில் பிடித்தது* 🛑

Reading Time:
மகிழ்ச்சி வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு உணர்வு. அதை தூண்டிவிட உங்களுக்கு சில பொன்மொழிகள் தேவைப்படலாம். அதற்கான தீர்வாக இது இருக்கட்டும்...!
October 03, 20210 Comments

I...M..W....



=========================


🌺“எந்த ஒரு கடினமான சூழலையும் நினைவில் கொள்ளாத கலை தான் மகிழ்ச்சி” – unknown. 


🌺 "ஒரு மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் – உறங்குங்கள் 


நீங்கள் ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் – மீன் பிடிக்க செல்லுங்கள் 


நீங்கள் ஒரு வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் – அதிர்ஷ்டத்தை நம்புங்கள் 


நீங்கள் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் – மற்றவர்களுக்கு உதவுங்கள் ”- Chinese Proverb 


🌺  நீங்கள் யார்?.. நீங்கள் என்ன செய்கிறீர்கள்… நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்பதில் உங்கள் மகிழ்ச்சி இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் தான் உங்கள் மகிழ்ச்சி உள்ளது_ Dale Carnegie. 


🌺 மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான், அதாவது உங்கள் சக்திக்கு மிகுந்ததை பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்” – Epictetus 


🌺 நம்மிடம் இல்லாத ஒன்றை பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை. காரணம் நம்மிடம் இருக்கும் ஒன்றுக்கு தான் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும் – Frederick Keonig 


🌺 சிலவேளைகளில் மகிழ்ச்சி உங்கள் புன்னகையில் இருந்து தோன்றலாம்… சில வேளைகளில் உங்கள் புன்னகை உங்கள் மகிழ்ச்சியில் இருந்து தோன்றலாம் – Thich Nhat Hanh 


🌺 தீங்கு ஏற்படுவதை விட எச்சரிக்கையில் தான் பல விஷயங்கள் அடங்கியுள்ளது. காரணம் எதார்த்தத்தை விட பயத்தில் தான் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம் – Seneca 


🌺மகிழ்ச்சியானவர்கள் செயல்களையே திட்டமிடுகின்றனர், முடிவுகளை அல்ல! – Dennis Waitley 


🌺 உலகின் தலைசிறந்த மகிழ்ச்சி “ஒன்றை தொடங்குவது” –Cesare Pavese 


🌺உனக்கு ஒன்று எங்கோ உண்டு...

அதைக்கண்டு கொண்டால் நீதான் உலகம்...-ஏன்

உலகிற்கே நீதான்... 


சோக வாழ்வை தூக்கிப்போடு

சுதந்திர வழியில் உனை நீ தேடு...

நீ வாழ்வை ஏற்றால் வரலாறு உன்னை ஏற்கும்...

காத்திருந்து போராடு...

உன் நன்பனாக நான் உன்னோடு... 


A UBAIDULLAH ............

Reading Time:

Saturday, October 2, 2021

சிந்தனை துளி
October 02, 20210 Comments


🎀வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை......



அடுத்த நொடி என்ன நிகழும் என்பதும் நம் கட்டுபாட்டில் இல்லை


ஆனால் நம்முடைய ஒவ்வொரு நாள் முடிவிலும் எவற்றை பாதுகாப்பாக நம்முடைய நினைவில் வைத்துக் கொள்கிறோம்


எவற்றை தவிர்க்க முடியும் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது


ஆகவே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது 

நம் கையில் தான், 

நம் மனதில தான், 


நாம் பார்க்கும் கோணத்தில் தானே தவிர 


இதற்கு மற்றவர்கள் யாரும் பொறுப்பு அல்ல


சிறப்பான கண்ணோட்டம் கொண்டு கையாளும் திறனை வளர்த்து கொள்வோம்


நிறைவான மனதோடு வாழ்வோம்.

Reading Time:

Friday, October 1, 2021

சிந்தனை துளி
October 01, 20210 Comments

''திட்டமிடாத செயல்...!"



இந்த உலகில் நம்மைச் சுற்றி பலர் கடினமாக உழைக்கின்றனர். ஆனால்!, தோல்வி என்பதையே சந்தித்துக் கொண்டு வெற்றியை மருந்துக்காகக் கூட பார்ப்பது இல்லை... 


காரணம்!,  பலர் ஒரு செயலை திட்டமிடாமல் செய்து விட்டு, தோல்வியடைந்து விட்டு, பிறகு தோல்விக்கான காரணத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர்... 


மேலும், பலர் பல நேரத்தில் தோல்வியடைந்தும் கூட அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது கிடையாது... 


நம்மைச் சுற்றி பல தோல்வியடைந்த மனிதர்கள் உள்ளனர். அதே வேளையில், நம்மைச் சுற்றி சில வெற்றி அடைந்த மனிதர்களும் உள்ளனர்... 


தோல்வியடைந்த மனிதர்களிடம் திட்டமிடாத வாழ்க்கை முறையைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வெற்றி அடைந்த மனிதர்களிடம் திட்டமிட்ட செயலை  கண் கூடாகப் பார்க்கலாம்... 


வெற்றியடைந்த மனிதர்களிடம் நேரம் தவறாமை, நேரத்தில் ஒரு செயலைச் செய்யும் பாங்கு என்று பல நல்ல குணங்கள் கண்கூடாகத் தென்படும். மேலும்!, வெற்றியாளர்கள் சிந்தனையோடு உழைக்கின்றார்கள். அதற்கு உண்டான பலனை அவர்கள் அடைகிறார்கள்... 


''கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை" என்ற நேற்றைய கோட்பாடு தவறானது. "சிந்தனையோடு திட்டமிட்ட கூடிய உழைப்புக்கு ஈடு இணை கிடையாது" என்பதுதான் இன்றைய கால கட்டத்துக்கு உகந்த கோட்பாடு... 


கடினமாக உழைப்பவர்கள், அதுவும் திட்டமிடாமல் கடினாமாக உழைப்பவர்கள்,வெற்றியடைய முடியாது... 


திட்டமிடுவதில்தான் வெற்றியின் மறைபொருள் (ரகசியம்) அடங்கியுள்ளது. சரியான நேரத்தில், சரியான வேலையை சரியாகத் திட்டமிட்டால் வெற்றியில் பாதி அடைந்ததாக பொருள்... 


*ஆம் நண்பர்களே...!* 


🟡 *வெறுமே கடுமையாக உழைத்தால் வெற்றியடைய முடியாது. உழைப்புக்குண்டான பலனைப் பெற வேண்டுமானால் முன் கூட்டியே திட்டமிடல் வேண்டும். திட்டமிடாமல் செயல்படுபவர்களின் வாழ்க்கை, துடுப்பு இல்லாத படகைப் போன்று நிலைகுலைந்து போய்விடுகிறது...!* 


🔴 *வெறுமனே ஒரு செயலை செய்கிறோம் என்று இல்லாமல், எதை செய்கிறோம் என்ற தெளிவான சிந்தனையோடு வேண்டும். திட்டமிடாத கடின உழைப்பு என்பதில் பலன் மிகவும் குறைவாகவே கிடைக்கும்...!!* 


⚫ *ஆனால்!, காலமும், உடல் உழைப்பும் மிக அதிகம் செலவிடப்பட்டிருக்கும். எனவே!, எந்த செயலையும் வெற்றிகரமாக்க, திறனாக திட்டமிட்டு உழைத்தால்தான், முழுமையான வெற்றி கிடைக்கும்...!!

Reading Time:

Tuesday, September 28, 2021

அரபு தத்துவங்கள்
September 28, 20210 Comments

  அரபு தத்துவங்கள்


🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀


*أن تكون وحيدا خير من فقدان سعادتك وفرحك في الحصول على محبة الآخرين....*


✨✨✨✨✨✨✨✨✨✨


*மற்றவர்களின் அன்பைபெற உன் சந்தோசத்தை இழப்பதை விட நீ தனிமனிதாக இருப்பது சிறந்ததடா!*



🤜🤛🤜🤛🤜🤛🤜🤛🤜🤛

❁ ═• *அரபு தத்துவங்கள்* •═ 

Reading Time:

Monday, September 27, 2021

சிந்தனை துளி
September 27, 20210 Comments

 உறவுகளிடம் ஏன் உளவேதனைகளைப் பகிர்வதில்லை

                     🌹🌹💐💐 💐💐🌹🌹

                    🌹🌹💐💐 💐💐🌹🌹


~~உளப் ~பிரச்சினைகளுடன் வாழும் நபர்கள் தங்களது உள-வேதனைகளை பகிர்வதற்கு / கலந்துரையாடுவதற்கு யாருமில்லாமல் தங்களது பிரச்சினைகளின் தீவிரத் தன்மைகளால் மனதிற்குள்ளேயே புதைத்து அதிலிருந்து மீற்வதற்கு வழி தெரியாமல் மிகவும்``` தடுமாறுகின்றனர்.```~

மன வேதனைகளின் ஆதிக்கம் குறையாது மீண்டும், மீண்டும் பிரச்சினைகள் தொடர்வதால் செய்வதறியாது வாழ்க்கையில் வெறுப்புற்று கவலையுணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.  இந் நிலைமைகள்தான் மனிதர்கள் விரக்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உள நோயாளிகள் தங்களது பிரச்சினைகளை யாரிடமாவது பரிமாறலாம், சொல்லலாம் என்று நினைக்கின்றபோது அங்கே எவனோ/ளோ அறியாத நபர்கள்தான் கிடைக்கின்றனர். 


சிலர் உளவியல் பயிற்றப்பட்டவர்களாக இருக்கின்றனர், அல்லது பயிற்சிபெறாத நபர்கள், அப்படியும் இல்லாமல் அனுபவும், தேர்ச்சியும் இல்லாத அறியாத நபர்களிடம் தங்களது உள வேதனைகளைப் பரிமாறி பல பிரச்சினைகளுக்கு ஆழாகியும் விடுகின்றனர்.


உறவினர்கள் முறையான அணுகுமுறைகளுடனும், பூரண பொறுப்புனர்வற்ற உளப்பாங்குடன் வழிநடத்துவதால் பாதிக்கப்பட்ட நபர்கள் அறிமுகமில்லாத நபர்களிடம் தங்களது வாழ்க்கையினை பரிகொடுத்து தவிக்கின்ற பக்கம் ஒரு புறம். காரணம் உதவுவதற்கு உறவுகள் தயாரில்லை, பிரச்சினைகளின் ஆழம் புரியாமை, சரியான புரிந்துணர்வின்மை, போதிய வழிகாட்டலின்மை, பிரச்சினைகளின் ஆழம் புரியாமை, கேட்பதற்கு நேரமோ, மனப்பான்மையோ இல்லாமை இது போன்ற பல கீழ்வரும் காரணங்களால் பலர் செய்வதறியாது தாங்களே தங்களை குறைகூறும் குற்ற உணர்வுகளால் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளால் வாழ்ந்து உளநோயாளிகளாக வாழ்வதைப் பார்க்கலாம். 


மனவேதனையுடன் வாழும் ஒரு நபருக்கு தனது வீட்டிற்குள் ஆறுதலும், ஆலோசனைகளும், வழிகாட்டலும் முறையாகக் கிடைக்காமல் *பிறர்மீது தங்கிவாழ்வதற்கு முயற்சிக்கின்றனர்.* வீட்டில் யாராவது உளவியல் பிரச்சினைகளை சொல்வதற்கு முயலுகின்றபோது நாம் பிரச்சினைகளை *காது தாழ்த்திக் கேட்காமல் விடை பகிருகின்றோம்.* தங்களது பிரச்சினைகளை முழுமையாக காது தாழ்த்திக் கேட்காது நமது கோணத்தில் விடை கொடுத்து வாயை அவ்வாறு அடைத்து விடுகின்றோம். *சொல்ல வந்த முழுமையான கதைகளை கேட்பதற்கு நாம் தயாரி்ல்லை* அவள்/ன் என்ன செய்வான் *அறிமுகமில்லாதவனிடம் சென்று தனது அந்தரங்கம் பிரச்சினைகளைப் பரிமாறுவார்கள்.* இச் சந்தரப்பத்தில் முழுமையாக *மற்றவர்களை சார்ந்தும், தங்கி வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.* 


பிரச்சினைகளுடன் வாழும் நபர்களுடன் நாம் *உடனிருக்க வேண்டும்.* அவர்களுக்கு ஏற்பட்ட மனக் கசப்பு எமக்கு சாதாரணமானதாகத் தோன்றினாலும் பிரச்சினைகளுககுள்ளானவருக்கு இது ஒரு பாரிய பிரச்சினையாகவும், முகங்கொடுப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இவ்வாறான விரக்தியான சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு *ஒத்துணர்வாகவும், ஆறுதலான மனப்பாங்குடனும் செயற்படுதல் வேண்டும். 


* எச் சந்தர்ப்பத்திலும் துணையாகவும், பங்களிப்புக்கும் நாம் ஒத்தாசையாக இருக்கின்றோம் என்ற உணர்வுபூர்வமான உள-நிலைகள்தான் நாம் அவர்களுடன் இருக்கின்றோம் என்ற நிம்மதி கிடைக்கும்.

*இன்று எம்மில் பலர் உள-வேதனையுடன் ஏாவது பிரச்சினைகளைப் பற்றி பேசினால் என்ன சொல்கின்றனர். இது உனக்கு சாதாரணமான பிரச்சினை, நீ சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர், நீயெல்லாம் பிரச்சினைகளுடன் வாழலாம? இதைவிட பல பிரச்சினைகளுடன் வாழும் நபர்களை நீர் பார்த்தால் உன்னுடைய பிரச்சினைகளெல்லாம் பிரச்சினையா? சும்மா விட்டுவிட்டு வேலையைப் பார்.....!* 



இதுதான் நம்மில் பலர் பயன்படுத்தும் ஆறுதல் வார்த்தைகள். 


இது உளவேதனையுடன் வரும் நபருக்கு நாம் கொடுக்கும் ஆறுதலாக அமையாது. 

இவ்வாறான ஆறுதல், ஆலோசனை வாரத்தைகளால் பாதிக்கப்பட்ட நபர் குணமடையமாட்டார் *மற்றவர்மேல் வெறுப்பும் ஏமாற்றமும்தான் ஏற்படும். 


* பிரச்சினைகளுடன் வரும் நபரை அவரது பிரச்சினைகளுடன் *நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.* இப்பிரச்சினை எனக்கு ஏற்பட்டால்  எப்படி இருக்கும் என்ற உணர்வுபூர்வமான புரிதல் அவசியமாகின்றது. இவ்வளவு மனவேதனையுடன் வாழ்கின்றீர்களா? உண்மையில் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழுக்கின்றீர்கள்.... உங்களது மனவேதனையினை என்னால் உணரக் கூடியதாக இருக்கின்றது. என்ற ஆறுதலை ஒத்துணர்வுடன் வழங்குவதன் மூலம்தான் பிரச்சினைகளுடன் வரும் நபருக்கு மனப்பாரம் *குறைந்ததான நிம்மதி கிடைக்கும். 


* *அதிகமான நபர்கள் உளவியல் நபர்களை நாடுவதற்கு முக்கிய காரணம் நம்மில் பலர் இரகசியமற்ற மனப்பான்மையுள்ளவர்களாக உதவுகின்றார்கள்.* அதேவேளை சரியான அணுகுமுறைகளுடன் அவர்களுடைய பிரச்சினைகளுடன் பிரச்சினைகளை நாம் அணுகுவதற்கு. வந்த நபர்கள் மனவேதனையுடன் பகிரும்போது அதற்கு ஆறுதல் கொடுப்பதோடு அது தொடர்பாக *பிரறிடமும் பரைசாற்றியும் விடுகின்றனர்.*  இதனால் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் ஆழ்ந்த அக்கரையுடன் செயற்படுவார்கள். இதனால் மனவேதனையுடையவர்கள் தங்களுக்குள் என்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மீண்டும் வந்து சொல்லாமல் தனக்குள்ளேயே மறைத்து எதிர்ப்பு உணர்வுகளால் நாட்பட்ட மற்றும் *விரக்தி நிலை மற்றும்  தீவிர உளப்பிரச்சினைகளுக்குள்ளாகின்றனர். 


* நடந்த பிரச்சினைகளை கேட்பதைவிட்டு விட்டு தேவையற்ற கேள்விகளை கேட்டு அவர்களை சங்கடத்திற்குள்ளாக்கக் கூடாது, நாம் அவருக்கு ஆறுதல் வழங்குவதற்கு பொருத்தமான கேள்விகளைக் கேட்கலாம். 


அந்தக் கேள்விகள் பரிவுடனும், சொல்பவர்களுக்கு ஆறுதலாகவும், சொல்வதற்கு ஆவலாகவும் இருத்தல் வேண்டும். 


அதை விடுத்து அவர்மேல் குற்றம் கண்டுபிடித்தல், நியாயப்படுத்தலுக்காக கேள்வி கேட்பது பாரிய உளப் பிரச்சினைகளை இன்னும் தூண்டுவதாக அமைந்து விடுகின்றது. 


இன்னும் சிலர் பிரச்சினைகளை பரிமாறும் நபர்களை *காது தாழ்த்திக் கேட்பதில்லை 


* பிரச்சினைகளுடன் ஒருவர் நம்மை நாடிவரும்போது நமது வேலைகள், செயற்பாடுகளை நிறுத்தி அவருடைய கோணத்தில் நின்று நாம் பிரச்சினைகளை உற்று நோக்குதல் வேண்டும். 


அல்லது அதற்கான நேரத்தை ஒதுக்குதல் வேண்டும். அல்லது அதற்கான வழிகாட்டலையாவது வழங்குதல் வேண்டும். 


கவனித்தல் என்பது சொல்பவரின் அங்க அசைவுகளை பார்க்க வேண்டும். உளவேதனைகளைப் பகிரும் நபர்களின் பிரச்சினைகளின் ஆழத்தை உணர்ந்து காது தாழ்த்திக் கேட்க வேண்டும். இவ்வாறு செய்யாது அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே இருக்க நாம் நம்முடைய வேலைகளில் கவனத்திலிருந்து, உளப்பிரச்சினைகளைப் பகிர்பவருக்கும் ம்ம்ம்.. ஆஹ்.....ஓஹ் என்று போலியாக தலையசைப்பதுவும் திருப்தியற்று விடுகின்ற அதேவேளை எம்மீது கோபமும், வெறுப்பும், அவநம்பிக்கையும் ஏற்படும். 


உளவேதனைகளையுடைய நபர்களை நாம் அவருடைய பிரச்சினைகளை முழுமையாக கேட்பதில்லை இடையே  குறுக்கிட்டு நமக்குத் தேவையான தகவல்களை மாத்திரம் பெறுவதற்கு ஆர்வமாக செயற்படுகின்றோமே ஒழிய பிரச்சினைகளின் ஆழத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. சொல்ல வரும் நபரை முழுமையாக அவரின் கதைகளைக் கேற்பதை விடுத்து அவருடைய பிரச்சினையின் காரணம் இதுதான் என்று நாம் பதிலளிக்க முனைகின்றோம். முழுமையாக அவரது உளக் கிடங்குகள், வேதனைகளை பகிர்வதற்கு நாம் சந்தரப்பம் கொடுப்பதில்லை. *நாம் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்காவிட்டாலும் அவர் நம்மிடம் சொல்வதால் கிடைக்கும் ஆறுதலுக்காவது கேட்கலாமல்லவா?* 


உளவியல் சார் பிரச்சினைகளுடன் வாழும் ஒருவர் எம்மிடம் பிரச்சினைகளை சொல்கின்றபோது அவர்கள் மேலும், மேலும் தங்களது உளக் கிடங்குகளை பரிமாறுவதற்கு உற்சாக மூட்டுதல் வேண்டும். சொல்வதற்கு தூண்டக் கூடிய உடல்மொழி அசைவுகள், கவனம், தட்டிக்கொடுத்தல் போன்று எமது தலை அசைப்பு ம்மம்.... ஆஹ் என்ற வாய்மொழி மூலமான வாரத்தைகளால் *உற்சாகமூட்டுவதால் இன்னும் சொல்வதற்கு முயற்சிப்பார்கள். 


* இவ்வாறான உளவியல் பிரச்சினைகளுடன் வாழும் நபர்களுக்கு நாமே உளவழிகாட்டலை வழங்குவதற்கான அடிப்படைய உளவியல் திறன்களை கையாள்வதால் பிரச்சினைகளுடன் வாழும் நபர்களின் பிரச்சினைகள் தீவிரமடையாது பாதுகாக்கவும், எந்நேரத்திலும் உதவுவதற்கும், கை கொடுப்பதற்கும் நாம் இருக்கின்றோம் எண்ணம் வலுப்பெறுகின்றது ஆக இதுவும் ஒரு உளவியல் பரிகாரமேயாகும். 


நம்மிடம் இருக்கின்ற மனித நேயம், வழிகாட்டல் அணுகுமுறைகளை முறையாகக் கையாள்வதால்  நாமும் உளவியல் சிகிச்சையார்களே. எனவே மகிழ்ச்சியான சூழலை உறுவாக்க நாமும் எமது அறிவு, திறன், மனப்பான்மைகளை இயன்றளவு பயன்படுத்துவோம். 


*இவ்வாறான சிறப்பு அணுகுமுறைகளை கவனத்திற்கொண்டு செயற்பட்டால் உளவேதனையோடு வரும் நபர்களுக்கு நாமும் உதவலாம்* 


அலாவுதீன் உபைதுல்லாஹ் 

Reading Time:

@way2themes