😔😔😔சிருக்கதை😔😔😔 - A UBAIDULLAH

Sunday, October 3, 2021

😔😔😔சிருக்கதை😔😔😔

MAU WORLD


 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

மனைவி இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்ட தந்தை மகனிடம் கேட்டார்...

இப்போ இருக்கிற புதிய அம்மாவை உனக்கு பிடித்திருக்கிறதா...


அப்போது மகன் சொன்னான்.

என் அம்மா என்னிடம் பொய் சொல்வார்...

ஆனாலும் இப்போ புதிதாக வந்திருக்கிற அம்மா என்னிடம் பொய் சொல்லவில்லை என்றான்.


இதைக் கேட்ட தந்தை உன் அம்மா சொன்ன பொய் என்ன? என்று கேட்டார்.


அதற்கு அவன் நான் ஏதாவது சேட்டைப் பண்ணினால் உனக்கு இன்று சாப்பாடு கிடையாது என்று சொல்லிவிட்டு எனக்குப் பசி எடுத்தவுடன் என்னைத் தூக்கி மடியில் உட்கார வைத்து பாசத்துடன் ஒவ்வொரு உருண்டையாக ஊட்டி விடுவார்.


ஆனால் தற்போது உள்ள அம்மா நான் சேட்டை பண்ணின போது என்னை அடித்து உனக்கு சோறு கிடையாது என்று சொன்ன வார்த்தையை இரண்டு நாட்களாக காப்பாற்றிக் கொண்டுள்ளார் என்றான்.


அவன் சொன்ன வார்த்தையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட அப்பா அவனை உடனடியாக தூக்கி ஓட்டலுக்கு கொண்டுபோய் உணவு வாங்கி கொடுக்கிறார் கண்ணீருடன்.


"அம்மா மட்டுமே அம்மாவுக்கு சமம்"

பூமியில் கண்களால் காணும் வரம் அம்மா.


 🛑 *படித்ததில் பிடித்தது* 🛑

No comments:

MA UBAIDULLAH

@way2themes