கதையும்
படிப்பினையும்..........!!!!!
கணவன் :
அஸர் தொழுதீர்களா...?
மனைவி :
........இல்லை....
கணவன் :
அஸர் தொழுதீர்களா...?
மனைவி :
.......இல்லை......
கணவன் : ஏன்?
மனைவி :
வேலைகள் முடியும் போது
மிகவும் களைப்பாக இருந்தது,
எனவே சிறிது தூங்கினேன்....!
கணவன் :
.......ம்ம்ம் நல்லது.....
இஷாவுக்கு அதான் சொல்ல
முதல் தற்போது போய் அஸரை.... தொழுதுவிட்டு மஃரிபையும், தொழுங்கள்....!
அடுத்த நாள்....................!!!!
கணவர்....
அவரது வேலை நிமித்தம்
ஒரு பயணத்தை மேற்கொண்டார்....
ஆனால் ...அன்று அவர் வழமைக்கு மாற்றமாக"தான் எந்த பிரச்சினையும் இன்றி பாதுகாப்பாக சென்றடைந்தேன்"
என்பதை... தொலைபேசியினுடாகதொடர்பு கொண்டோ அல்லது ஒரு குறுந்தகவலினூடிகவோ (sms) மனைவிக்கு அறிவிக்கவில்லை...!
மனைவி l....
தன் கணவன் பாதுகாப்பாக சென்றடைந்தாரா...?
என்பதை...
அறிந்து கொள்ள தொலைபேசியினூடாக
அவரை தொடர்பு கொண்டாள்....!
ஆனால்...
அவர் பதிலளிக்கவில்லை......
மீண்டும் மீண்டும்
அழைப்பை ஏற்படுத்தினால்.....
தொலைபேசி மணி ஒழிக்கிறது.........
ஆனால்
மறுமுனையிலிருந்து பதில் எதுவுமில்லை.....
அவளது மனம் தடுமாறத்தொடங்கியது........
இது வழமைக்கு
முற்றிலும் மாற்றமானது........
அவள் மீண்டும் மீண்டும்
அழைப்பை ஏற்படுத்தினாள்.......
ஆனால்
மறுமுனையிலிருந்து பதில் எதுவுமில்லை.......
பல நிமிடங்கள் கழித்து
இறுதியாக அவன் அவளைத்...
தொடர்பு கொண்டான்.....
அவள் அவ்வழைப்புக்கு
பதற்றத்துடன் பதிலளித்தாள்.......
மனைவி : நீங்கள்...
பாதுகாப்பாக சென்றடைந்தீர்களா...?
கணவன் : ஆமாம்...... அல்ஹம்துலில்லாஹ்........
மனைவி : எப்போது?
கணவன் : கிட்ட தட்ட நான்கு மாணித்தியாலயங்களுக்கு முன்பு...
மனைவி : (கோபத்துடன்)நான்கு மாணித்தியாலயங்களுக்கு முன்னரா?.......
ஏன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை...?.......
கணவன் : வந்து சேரும் போது
மிகவும் களைப்பாக இருந்தது...
எனவே சிறிது தூங்கினேன்.....
மனைவி : என்னுடன்
சிறிது கதைத்திருந்தால்
உங்களுக்கு என்னவாகப் போகிறது?...
நான் உங்களுடன் தொடர்பு கொண்ட போதாவது தொலைபேசியினுடைய
மணி ஓசையைக்கேட்கவில்லையா..?.
கணவன் : கேட்டேன்....
மனைவி : பின்னர் ஏன் பதிலளிக்கவில்லை...?....
நீங்கள் என் விடயத்தில் பொடுபோக்காய் இருந்துள்ளீர்கள்...
கணவன் : ஆமாம்......
ஆனால்
நேற்று நீயும் இவ்வாறு தானே...
#அதானுடைய ஓசையைக்கேட்டும் பொடுபோக்காய் இருந்தாய்?......
#அதான்.......
அது அல்லாஹ்வினுடைய அழைப்பு.....
அவள் பதிலளிக்கவில்லை..... அமைதிகாத்தாள்..........
மனைவி : (சிறிது மௌனத்திற்குப் பின் கண்ணீருடன்.....)
ஆம்....
நீங்கள் உண்மையைத் தான் கூறுகிறீர்கள்.....
அதை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.....
கணவன் : அதற்கு என்னால்
ஒன்றும் செய்ய முடியாது.....
அதற்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.....
ஆனால்..........
மறுபடியும் இவ்வாறு செய்யாதீர்கள்....
"நான் விரும்புவது....
அல்லாஹ்விடம் கேட்பதெல்லாம்.......
அல்லாஹ் என்னையும் உங்களையும் சுவனத்தின் ஒரு மாளிகையில் ஒன்று சேர்க்க வேண்டும்......
அங்கு நிரந்தரமான ஒரு வாழ்வை நாம் ஆரம்பிக்க வேண்டும்...
என்பதே......
"அன்றிலிருந்து அவள்
கடமையான எந்த அமலையும்.... பிற்போடுவதில்லை....!
"உங்களை உண்மையாக
நேசிக்கக் கூடிய ஒருவர் எப்போதும்...
அல்லாஹ்வினுடைய பாதையில், நீங்கள் முன் நோக்கிச் செல்ல... உங்களை தூண்டிக் கொண்டே, இருப்பதுடன்.....!!!
உங்கள் பாதையில் நின்று நீங்கள் பின் நோக்கி வராது உங்களை தடுத்துக் கொண்டே இருப்பார்.......!!
==================================
மனதைத் தொட்ட வரிகள்....!!!!!!!!!!!
No comments:
Post a Comment
MA UBAIDULLAH