சிந்தனை துளி

''திட்டமிடாத செயல்...!"



இந்த உலகில் நம்மைச் சுற்றி பலர் கடினமாக உழைக்கின்றனர். ஆனால்!, தோல்வி என்பதையே சந்தித்துக் கொண்டு வெற்றியை மருந்துக்காகக் கூட பார்ப்பது இல்லை... 


காரணம்!,  பலர் ஒரு செயலை திட்டமிடாமல் செய்து விட்டு, தோல்வியடைந்து விட்டு, பிறகு தோல்விக்கான காரணத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர்... 


மேலும், பலர் பல நேரத்தில் தோல்வியடைந்தும் கூட அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது கிடையாது... 


நம்மைச் சுற்றி பல தோல்வியடைந்த மனிதர்கள் உள்ளனர். அதே வேளையில், நம்மைச் சுற்றி சில வெற்றி அடைந்த மனிதர்களும் உள்ளனர்... 


தோல்வியடைந்த மனிதர்களிடம் திட்டமிடாத வாழ்க்கை முறையைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வெற்றி அடைந்த மனிதர்களிடம் திட்டமிட்ட செயலை  கண் கூடாகப் பார்க்கலாம்... 


வெற்றியடைந்த மனிதர்களிடம் நேரம் தவறாமை, நேரத்தில் ஒரு செயலைச் செய்யும் பாங்கு என்று பல நல்ல குணங்கள் கண்கூடாகத் தென்படும். மேலும்!, வெற்றியாளர்கள் சிந்தனையோடு உழைக்கின்றார்கள். அதற்கு உண்டான பலனை அவர்கள் அடைகிறார்கள்... 


''கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை" என்ற நேற்றைய கோட்பாடு தவறானது. "சிந்தனையோடு திட்டமிட்ட கூடிய உழைப்புக்கு ஈடு இணை கிடையாது" என்பதுதான் இன்றைய கால கட்டத்துக்கு உகந்த கோட்பாடு... 


கடினமாக உழைப்பவர்கள், அதுவும் திட்டமிடாமல் கடினாமாக உழைப்பவர்கள்,வெற்றியடைய முடியாது... 


திட்டமிடுவதில்தான் வெற்றியின் மறைபொருள் (ரகசியம்) அடங்கியுள்ளது. சரியான நேரத்தில், சரியான வேலையை சரியாகத் திட்டமிட்டால் வெற்றியில் பாதி அடைந்ததாக பொருள்... 


*ஆம் நண்பர்களே...!* 


🟡 *வெறுமே கடுமையாக உழைத்தால் வெற்றியடைய முடியாது. உழைப்புக்குண்டான பலனைப் பெற வேண்டுமானால் முன் கூட்டியே திட்டமிடல் வேண்டும். திட்டமிடாமல் செயல்படுபவர்களின் வாழ்க்கை, துடுப்பு இல்லாத படகைப் போன்று நிலைகுலைந்து போய்விடுகிறது...!* 


🔴 *வெறுமனே ஒரு செயலை செய்கிறோம் என்று இல்லாமல், எதை செய்கிறோம் என்ற தெளிவான சிந்தனையோடு வேண்டும். திட்டமிடாத கடின உழைப்பு என்பதில் பலன் மிகவும் குறைவாகவே கிடைக்கும்...!!* 


⚫ *ஆனால்!, காலமும், உடல் உழைப்பும் மிக அதிகம் செலவிடப்பட்டிருக்கும். எனவே!, எந்த செயலையும் வெற்றிகரமாக்க, திறனாக திட்டமிட்டு உழைத்தால்தான், முழுமையான வெற்றி கிடைக்கும்...!!

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages