A UBAIDULLAH: islamic news
Showing posts with label islamic news. Show all posts
Showing posts with label islamic news. Show all posts

Monday, April 28, 2025

By walking calmly Your livelihood Does not decrease...
April 28, 20250 Comments

By walking calmly Your livelihood Does not decrease...


hard work

your livelihood

Not adding up...


Pleasure does not last

Suffering doesn't last...


Prosperity does not last for you,

Misery doesn't last...


Mind enough

If you are the one who has...


You and the king who rules the world are equal...

                                                                                                                                     A Ubaidullah》

Reading Time:

Thursday, October 14, 2021

மதி கலங்கிப்போதே மங்கையே..!!
October 14, 20210 Comments

Info Mau World.com


 

மதி கலங்கிப்போகாதே மங்கையே! மட்டுப்பட்ட உலக வாழ்வை கண்டு..


மாண்புமிகு இறைவனின் ஆக்கரமிப்பில் நீ அவன் அடிமை என உணர்ந்து வாழ் மங்கையே!! .


முஸ்லிம் எனும் பெரும்பட்டம் உனக்கு தானாக கிடைத்ததால் உதாசீனப்படுத்தாதே மங்கையே!


மூ வாழ்க்கையிலும் வெற்றி பெறுவாய், முஹம்மத் நபியை பின்பற்றி வாழ்ந்தால் மங்கையே!


மெல்லிய ஆடையை அணிந்து மார்க்கத்தை இழிவுபடுத்தாதே மங்கையே!


மேன்மைமிகு மறையை தினமும் தவறாது ஓதி வா மங்கையே!


மெய்யையே உணர்த்தும் மாண்புமிகு இஸ்லாத்தை மதியாது வாழாதே மதி கலங்கிப்போய் மங்கையே!


மேதையாக இரு இஸ்லாத்தில் பார்வையில் மங்கையே!


மௌத்தை நினைத்தே வாழத்தொடங்கிடு வாழ்வே மகிழ்வாகும் மங்கையே!


 மதி கலங்கிபோகாதே மங்கையே!


மறைத்துக்கொள்ள வேண்டிய அவ்ரத்துக்களை மறைத்தல் என்ற பெயரில் மானக்கேடான ஆடையை அணியாதே மங்கையே!


மானத்தை போக்கும் ஆடையை அணிய அனுமதிக்கும் (Denim) உன் தந்தையாக இருக்கலாம் கணவனாக இருக்கலாம் மறுமை அன்று அவனுடன் பேச மறுப்பான் சர்வலோக அதிகாரி இறைவனவன்  தெரிந்துகொள்ள மங்கையே!


மறுமை ஆரம்பமாகும் போது ஆண்கள் அணியும் ஆடை மங்கையவளின் மேனியிலும் தென்படுவதும் அடையாளம் தான் என மாண்புமிகு முஹம்மத் நபி சொன்னாரல்லவா!?


மனதை தொட்டு சொல்?

சொன்னவாரே  உலகம் நடக்கிறதா? உன் மேனியிலும் அவை இருக்கிறதா? மறுமை வாழ்வை நினைத்தே ஆடையையும் அணி மங்கையே!


மேன்மை மிகு இஸ்லாம் எனும் மார்க்கத்தில் இருந்து கொண்டு டெனிம் எனும் ஆணாடையை அணிவது அந்த இறைவனுக்கே பொறுக்குமா? யோசித்தாயா மங்கையே!


மட்டுப்பட்ட வாழ்க்கையை வாழ வந்த உனக்கெதற்கு மறுமை வாழ்வை நரகமாக்கும் ஆடைகள்? சிந்தித்து செயல்படு மங்கையே!


மறை மறுக்கும் மார்க்கத்திற்கு இழிவை ஏற்படுத்தும் செயல்களை செய்து சுவனத்தை இழந்து விடாதே!! மங்கையே!


மாதாவைவிட 70 மடங்கு இரக்கம் உள்ள மனம் இறைவனவனது அவன் வழியில் நடக்காது அவவழியில் நடந்தால் உன் நிலைமை என்ன?? யோசி மங்கையே!


மறுமையை நினைக்காது மனம் போன போக்கில் உலக ஆசைக்கு அடிமையாகி விடாதே மங்கையே!


மங்கைக்கு அதிக உரிமை தந்த மாண்புமிகு இஸ்லாத்தை பாதுகாப்பது உனது உரிமை அல்லவா?


நரக நெருப்பிலிருந்து உன்னை பாதுகாப்பது உன் நல்லமல்களும் நன்னடத்தைகளுமே தவிர வேறொன்றுமில்லை!


மங்கையாக பிறந்துவிட்டோமே என்று சலித்துக்கொள்ளாதே!


ஆசைகளை அடக்கி வைக்கப்பழக்கப்படுத்து உன் அகத்தை இல்லயேல் உன்னை அடக்கம் செய்யப்படும் இடம் வேதனை தரக்கூடியதாக இருக்கும்.


மங்கையவள்  இருந்தால் உலகம் சரியாகும் என்பது வேறு மதத்திற்கு ஒப்பாகுமே தவிர இஸ்லாத்திற்கில்லை.


இஸ்லாத்தை பொறுத்தவரை மங்கையவள் சரியாக இருந்தாலே உலகமும் சரியாகும் மார்க்கமும் சரியாகும் புரிந்து நடந்து கொள் மங்கையே!


மங்கையாக பிறந்து விட்டோம் என்பது தப்பில்லை வாழும் வாழ்க்கை ஈறுலகிற்கும்  பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்!


மீண்டும் கூறுகிறேன், கவிவடித்தவளாய் இல்லை இஸ்லாத்தின் மங்கையாய்..


மதி கலங்கி போகாதே மங்கையே! உன் மதி கலங்கிவிட்டால், மதி கூட வெளிச்சம் தர தயங்கும் இறைவனின் கட்டளைப்படி..

Reading Time:

Monday, October 4, 2021

இஸ்லாமிய பெண்களே ....!!!!
October 04, 20210 Comments

╔═══❖✭᯽⊱❊🌹 ❊⊰᯽✭❖═══╗

 🌹🌹INFORMATION WORLD🌹🌹

╚═══❖✭᯽⊱❊🌹❊⊰᯽✭ ❖═══╝



 *ASSALAMU ALAIKUM....🖤


பொசுக்கு பொசுக்கென்று கோபப்பட்டு divorce கேட்டு நீதிமன்றம் செல்லும் பெண்களே இது உங்கள் கவனத்திற்கு:


ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது ! 


மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே  அதில் மாற்று  கருத்து இல்லை. 


ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும் குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. 

ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை இது மிகப் பெரிய காரணம் எனலாம்.


உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும் யோசிக்காதே தைரியமாய் முடிவெடு என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் மீறிய விஷயங்கள் இருக்கின்றது.


உங்களுக்கு வேறொரு கணவன் கிடைக்கலாம் அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம் ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ & அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.


பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக  8300 கி.மீ. கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! 

அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது  சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும். 


ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.


சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும் சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில்  மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.


தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.


பெண்ணியம் என்றால்  விவாகரத்து பெறுதல் என்பது மட்டுமே அல்ல  என்ற புரிதல் வேண்டும் ! 

ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள  காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தான்! . 

மாற்றப்படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்.!


தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம்  தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?


அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?


அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம் பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே ! 


மேலை நாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணைதேடிக் கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்தியப்படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.


அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.


இனம் காப்பதில் துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! 


அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்.!



*╔═══❖✭᯽⊱❊🌹 ❊⊰᯽✭❖═══╗*

 *🌹🌹INFORMATION WORLD🌹🌹* 

*╚═══❖✭᯽⊱❊🌹❊⊰᯽✭ ❖═══╝*

Reading Time:

Sunday, October 3, 2021

கவலையான ஒரு சம்பவம் "" சிந்தனைக்காக..
October 03, 20210 Comments

I...M..W....


💞💞💞💞💞💞💞💞💞💞

🔴 ஒரு மனிதன் அழுது கொண்டிருந்தான். ! ! ! 


🔴 ஒருவர் அவரிடம் வந்து காரணம் கேட்டார்..


🔴 அதற்கு அவன் , எனக்கு ஒரு மகன் இருக்கிறான், 


நான் அவனை படிக்க வைத்தேன், அவனை சிறந்த மனிதனாக்கும் நோக்கத்துடன்...


அவனை பல்வேறு இடங்களில் படிக்கவைத்தேன்.


🔴 மெட்ரிக் , இன்டர் , பீ ஏ , எம் ஏ...


அத்தோடு அவனை வெளிநாட்டுக்கும் மேல் படிப்புக்காக அனுப்பினேன்,


🔴 ஆயினும் ?


திடீரென அவன் சுகயீனமுற்றான் , வைத்தியர்களும் அவன் மரண தருவாயில் இருக்கிறான் எங்களாலும் ஒன்றும் செய்ய முடியாது , அவன் அவனது இருதி நாளை அடைகின்றான் என்றனர்...


🔴மகன் சொன்னான் ,


 தந்தையே ! நான் படித்து பெற்ற சான்றிதழ்களை கொண்டு வாருங்கள் என்றான்..,


நான் கொண்டு வந்ததும் அவன் சொன்னான், இவை எல்லாம் நான் பெற்ற பக்கங்கள் , இருந்தாலும் நீங்கள் எனக்கு குர்ஆனை கற்பிக்க வில்லை..,


🔴 ஆகவே நான் எனது இறைவனை எவ்வாறு சந்திப்பது. ,


இதனை யாரும் பகிர மாட்டோம் காரணம் இது ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவை இல்லை,


உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இதனை பகிரவும்....


தயவு செய்து எந்த மாற்றமும் இல்லாமல் பகிரவும்..


பகிரும் முன் இதனை வாசிக்கவும்--ஜஸாகல்லாஹ்.,


📌உடனே எழுந்திருங்கள் பாங்கு அழைப்பு கேட்டதும்; உங்கள் மொபைலின் அழைப்பு கேட்டதும் எழுவதைப் போல


📌குர்ஆனை கவனமாக வாசிக்கவும் உங்களுக்கு வந்த மெஸேஜை வாசிப்பதை போல..


அல்லாஹ்வை மரணத்தை அஞ்சுவதைப்போல அஞ்சுங்கள்...


 மரணத்தை நினைவு கூறுங்கள் உங்கள் பெயர்களை நினைவு கூறுவதைப்போல


🌷ஒவ்வொரு நேர தொழுகைக்கும் எவ்வளவு நேரம் தான் பிடிக்கும்


பஜர்          4/6 நிமிடங்கள்

லுஹர்.     6/8 நிமிடங்கள்

அஸர்        6/8 நிமிடங்கள்

மஹ்ரிப்.   5/7 நிமிடங்கள்

இஷா     7/10 நிமிடங்கள்


🔴 மொத்தம் 28/39

நிமிடங்கள் 24 மணித்தியாலங்களில் செலவாகிறது


🌺நாங்கள் சிந்திப்போம்  அல்லாஹ்வுக்காக எங்களிடம் நேரம் உள்ளதா?...


🔴80% ஆனவர்கள் இதனை பகிரமாட்டார்கள் ! ! !

💞💞💞💞💞💞💞💞💞💞

Reading Time:
நெருக்கடியான நேரங்களைக் கையாள்வது எப்படி?
October 03, 20210 Comments

I...M..W....


இன்றைய உளவியல் குறிப்பு

நம் வாழ்க்கைப் பயணம் என்பது அடைய வேண்டிய இலக்குகளுக்கானது மட்டுமே அல்ல. நம்முடைய அறிவு, கல்வி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நாம் சந்தித்த மக்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இந்தப்பயணத்தின் வழியில் ஒருவேளை எதிர்பாராத குறுக்கீடுகள் வரலாம். 


தீர்க்க முடியாதது போல தோன்றும் சிக்கல்கள் வரலாம். இந்த பிரச்னைகள் பொருளாதாரம், உறவுச்சிக்கல், உங்கள் உடல்நலம் என வேறு எதுவாகவும் இருக்கக்கூடும். இவற்றைச் சமாளிக்க தயாராகாமல் இருந்தால் நம்மை புரட்டிப்போட்டு செய்வதறியாது அப்படியே நிலைகுலைந்து நின்றுவிடுவீர்கள். இவற்றைக் கையாளக் கற்றுக் கொள்ள Crisis management பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதுபோல், ஆபத்தைச் சந்திக்க உதவும் வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.


பிரச்னையின் தன்மை அறிதல்இழப்புகளையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் விதத்தில் நாம் ஒவ்வொருவரும் வித்தியாசப்படுகிறோம். இழப்பை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, நீங்கள் யார் எனவும், எவ்வாறு மாறப்போகிறீர்கள் என்பதையும் தீர்மானிக்கிறீர்கள். சில நேரங்களில் பிரச்னையை கையாள்வது மிக எளிதானதாகவோ அல்லது நெருக்கடியானதாகவோ இருக்கலாம். 


நோய்கள், பொருளாதார நெருக்கடி, உறவுச்சிக்கல் இப்படி நாம் அடிக்கடி சந்திக்கக்கூடிய பிரச்னைகளை எடுத்துக் கொண்டால் அடிப்படையில் நம்முடைய பணி சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. இவற்றை எதிர்கொள்ள தேவை, சுய பராமரிப்பு பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை மேலாண்மை. அதற்கு, உங்கள் நேரத்தை, உங்கள் வேலையை, உங்கள் வாழ்க்கையை  நிர்வகிக்க வேண்டும். அதைக் கற்றுக் கொண்டால், நிச்சயம் எந்த மாதிரியான பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடுவீர்கள்.


👉பயனில்லாதவற்றை செய்யாதே...


பலர் இதை புரிந்து கொள்வதில்லை. சுயநலம் என்று நினைக்கிறார்கள். அலுவலகத்திலோ, மற்ற இடத்திலோ ஒருவர் கொடுக்கும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. 


உங்களது நேரத்தை எடுத்துக்கொள்ளும் அல்லது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வேலையாக இருக்குமானால், கண்டிப்பாக அதற்கு ‘நோ’ சொல்ல பழகிக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் ‘யெஸ்’ சொல்லாதீர்கள். அது சுயநலமாக இருக்காது, பதிலாக உங்கள்மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நிர்வகிக்க உதவும்.


👉நேர நிர்வாகம்


நேரத்தை நிர்வகிக்க முதலில் ஒவ்வொரு வேலைக்கும் கால அட்டவணை வகுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து தவறாதீர்கள். குறைந்தபட்சம் அடிப்படை நேர ஒழுக்கத்தை பின்பற்றினாலே எதிர்பாராமல் ஏற்படும் சில நேர நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அலுவலக வேலை, தூங்குவது, டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது அல்லது ஃபேஸ்புக், டிவிட்டர் எதுவாக இருந்தாலும் அதற்காக நடுநிலையாக நேரத்தை செலவழிக்க முயற்சி செய்யுங்கள். 


👉வேலையை பகிர்தல்


வீட்டிலோ, அலுவலகத்திலோ எல்லா வேலைகளையும் நீங்களே செய்தால்தான் சரியாகச் செய்ய முடியும் என்று தவறாக கணக்குப் போடாதீர்கள். முக்கியமான, உங்கள் நேரடி கண்காணிப்பு தேவைப்படும் வேலையென்றால் நீங்களே செய்யலாம். சாதாரண வேலைகளை மற்றவர்களை செய்ய வைப்பதன் மூலம் அவர்களுக்கும் பயிற்சி அளிப்பது போல் இருக்கும், அதேவேளை உங்களது வேலையையும் குறைத்துக் கொள்ளலாம். 

இதனால் தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்க முடியும். 


👉இடைவெளி


கடுமையான வேலைப்பளு இருக்கும்போது, சிறிது இடைவெளி கொடுத்து வெளியே சென்று வரலாம். மிகப்பெரிய புராஜெக்ட் ஒன்றை முடித்திருப்பீர்களானால் சின்னதாக ஒரு ட்ரிப் அடிக்கலாம். பணியிலிருந்து இடைவெளி பெறுவது குழம்பிப்போன உங்கள் மூளையை தெளிவாக்கவும், நெருக்கடிக்கு நடுவில் உங்கள் ஆற்றலை புதுப்பிக்கவும் உதவியாக இருக்கும்.


👉வெளிப்படைப் பேச்சு


நெருக்கடியான நேரங்களில் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சார்ந்திருக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாகப் பேசி, கருத்துக்களை கேட்டறிவதும் அவசியம். உங்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்படுபவர்களாக இருந்தால், அவர்களுடனான உரையாடல், பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை கண்டறிவதற்கும், பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவும்.


👉கனிவாக இருங்கள்


பிரச்னை உங்களுக்கோ, உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கோ இருக்கலாம் என்பதால் உங்களை நேசிக்கிறவர்களையும், நீங்கள் நேசிக்கிறவர்களையும் மறக்காதீர்கள். இந்த நேரத்தில் அவர்களிடம் மிகுந்த கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்காக செய்யும் சின்னச்சின்ன செயல்களும் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கலாம். உங்கள் வேலைப்பளுவில் அவர்களை புறக்கணித்துவிடாதீர்கள்.


👉நிலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள்


நமக்கு ஒரு நிகழ்வு ஏற்படுகிறதென்றால், கண்டிப்பாக இருக்காது என்று முதலில் அதை மறுப்போம். அதனால் கோபம் வரும்; அதைப்பற்றி விவாதம் செய்வோம். அதற்காக வருந்தி மன அழுத்தம் உண்டாகும். இறுதியில் அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கோபப்பட்டு, அழுது, அங்கே நின்று கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.


👉தீய பழக்கங்களுக்கு அடிமையாக வேண்டாமே...


ஒரு இழப்பை எதிர்கொள்ளும்போது அதிலிருந்து தப்பிப்பதற்காக கெட்ட பழக்கங்களுக்கு தூண்டப்படுவீர்கள். அவை தற்காலிக சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நிரந்த அடிமையாகி, பின்னர் அதுவே வாழ்நாள்  போராட்டமாகிவிடும். உணர்ச்சியாக இருக்கும் இந்தத் தருணத்தில், கெட்ட பழக்கங்கள் கொண்ட நண்பர்களுடனான நட்பைத் தவிர்த்துவிடுங்கள். வேடிக்கைக்காகக்கூட போதைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.


👉ஆரோக்கியம் அவசியம்


சோகமாக இருக்கிறோம் என்பதற்காக சரியான நேரத்தில் சாப்பிடாமல், உறங்காமல் உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் கவனத்தை திசை திரும்ப ஏதேனும் உடற்பயிற்சி அல்லது யோகா வகுப்புகளில் சேரலாம். மன ஆரோக்கியத்திற்கு சிறந்த மனநல ஆலோசகரை அணுகலாம். இன்பம், துன்பம் இரண்டையும் சமநிலையாக எடுத்துக்கொண்டு, உங்களுக்கான இந்த வாழ்க்கையை, முடிந்தவரை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு.

❁ ════ ❃•  *IMW*  •❃ ════ ❁

Reading Time:

@way2themes