வரலாற்றில் இன்று October 02

Info Mau World



அக்டோபர் 2 (October 2) 

கிரிகோரியன் ஆண்டின் 275 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.

இன்றைய நிகழ்வுகள் 


  • 829 – தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
  • 1187 – 88 ஆண்டுகள் சிலுவை வீரர்களின் ஆட்சியின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாகுத்தீன் எருசலேமைக் கைப்பற்றினான்.
  • 1263 – நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
  • 1470 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினார்.
  • 1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார்.
  • 1552 – உருசியப் படைகள் கசானை ஊடுருவின.
  • 1608 – டச்சு வில்லைத் தயாரிப்பாளர் ஆன்சு லிப்பர்சி முதலாவது தொலைநோக்கியை டச்சு நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தினார்.
  • 1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: உளவாளி என்ற சந்தேகத்தில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜான் அந்திரே அமெரிக்க விடுதலைப் படையால் தூக்கிலிடப்பட்டார்.
  • 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படையினர் வர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
  • 1865 – இலங்கையின் முதலாவது தொடருந்து போக்குவரத்து சேவை கொழும்புக்கும் அம்பேபுசைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது.[1]
  • 1903 – யாழ்ப்பாணம் ஸ்டீம் நெவிகேசன் கம்பனிக்குச் சொந்தமான "ஜாஃப்னா" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.[2]
  • 1919 – அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பெரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
  • 1925 – தொலைக்காட்சித் திட்டத்தின் முதலாவது சோதனையை ஜான் லோகி பைர்டு நடத்தினார்.
  • 1937 – டொமினிக்கன் குடியரசில் வசிக்கும் எயிட்டிய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார்.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டை: நாட்சி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தன.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: குயீன் மேரி கப்பல் தவறுதலாகத் தனது பாதுகாப்புப் படகு குரக்கோவாவை மோதி மூழ்கடித்ததில் 337 மாலுமிகள் உயிரிழந்தனர்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் வார்சாவா கிளர்ச்சியை அடக்கின.
  • 1955 – ஆரம்பகாலக் கணினிகளில் ஒன்றான எனியாக் மூடப்பட்டது.
  • 1958 – கினி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது..
  • 1968 – மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தின் முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
  • 1970 – அமெரிக்கா, கொலராடோவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விச்சிட்டா அரசுப் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.
  • 1972 – இலங்கையின் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகம் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.
  • 1990 – சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
  • 1992 – பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
  • 1996 – பெரு விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 70 பேரும் உயிரிழந்தனர்.
  • 2006 – பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
  • 2007 – தென் கொரிய அரசுத்தலைவர் ரோ மூ-இயூன் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு எல்லை தாண்டி வட கொரியா சென்றார்.
  • 2016 – எத்தியோப்பியாவில் பண்டிகை ஒன்றின் போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் கொல்லப்பட்டனர்.
  • 2018 – சவூதி ஊடகவியலாளர் ஜமால் காசோகி இசுதான்புல்லில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்கு சென்றதை அடுத்து அவர் காணாமல் போனார்..

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages